February 21, 2026

டெல்லி ஏஐ மாநாடு: மைக்ரோசாப்ட் ஸ்மித் முதல் ‘மெட்டா’ அலெக்சாண்டர் வரை கூறியது என்ன?

ஜூலி ஸ்வீட், பிராட் ஸ்மித், அலெக்​சாண்​டர் வாங்

ஜூலி ஸ்வீட், பிராட் ஸ்மித், அலெக்​சாண்​டர் வாங்

Follow Us

இந்தியாவில் ஏஐ முதலீடு: மைக்​ரோ​சாப்ட் நிறு​வனத்​தின் மிகப்​பெரிய ஏஐ முதலீட்டு நாடு​களில் இந்​தி​யா​வும் ஒன்று என்று அந்த நிறு​வனத்​தின் துணைத் தலை​வர் பிராட் ஸ்மித் டெல்​லி ஏஐ உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

புதி​தாக தொழில் மயமாக்​கப்​பட்ட அல்​லது வளரும் நாடுகளான தெற்​குலக நாடு​களில் (குளோபல் சவுத்) வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் செயற்கை நுண்​ணறிவை (ஏஐ) விரிவுபடுத்​து​வதற்​காக 50 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை முதலீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ளோம் என்றும் அவர் கூறினார்.

ஆரம்​பக் கல்​வி​யில் ஏஐ பாடங்​கள்: அசென்ச்​சர் நிறுவனம் பாராட்டு

அசென்ச்​சர் நிறு​வன தலை​மைச் செயல் அதி​காரி ஜூலி ஸ்வீட் மாநாட்டில் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் தொடக்​கப் பள்​ளி​யில் தொடங்​கி, கல்​வித் துறை​யில் ஏஐ பாடங்​களை கொண்டு வந்​துள்​ள​தில் இந்​திய அரசு சிறப்​பாக செயல்பட்டு வரு​கிறது.

இந்​தி​யா​வைப் போலவே உலகெங்​கிலும் உள்ள அரசுகள், இந்த முறையைப் பின்​பற்ற வேண்​டும். அப்​போது ஏஐ நம்ப முடி​யாத அளவுக்கு வளர்ச்​சியை எட்​டும். இந்தியாவில் 3.5 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ஊழியர்​களை பணி​யமர்த்தி அசென்ச்​சர் செயல்​பட்டு வரு​கிறது.

ஏஐ கொண்டு வரப்​பட்​டதன் மூலம் கல்வி என்​பது இனி ஒரு இலக்​காக இருக்​காது. நாம் நமது வாழ்​நாள் முழு​வதும் கற்றல் பணி​யைத் தொடர வேண்​டும். நிறு​வனங்​களும் நாடு​களும் புதிய தொழில்​நுட்​பங்​களை உற்​பத்​தித் திறனை அதி​கரிக்க ஏஐ பயன்​படுத்த வேண்டும். இவ்வாறு அவர்​ பேசி​னார்​.

அரசு – தனி​யார் ஒத்​துழைப்பு தேவை: மெட்டா நிறுவன அதிகாரி வலி​யுறுத்​தல்

மெட்டா நிறுவன தலைமை அதி​காரி (செயற்கை நுண்ணறி​வு) அலெக்​சாண்​டர் வாங் மாநாட்டில் பேசியதாவது: செயற்கை நுண்​ணறிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அதன் கொள்​கைகளைச் சரி​யாக செயல்​படுத்​து​வ​தி​லும், முதலீட்​டைப் பெறுவதிலும் தீவிரம் காட்ட வேண்டும்.

ஏஐ தொழில்​நுட்​பத்​தின் முழு திறனை​யும் வெளிப்​படுத்த அரசுகள் – தனி​யார் நிறு​வனங்​களின் ஒத்​துழைப்பு பெரிய அளவில் தேவை. செயற்கை நுண்​ணறிவு 4 முக்​கிய பிரிவு​களான திறமை, ஆற்​றல், தரவு, கம்ப்​யூட்​டிங் ஆகிய​வற்றை ஒருங்​கிணைத்து வழங்க வேண்​டும்.

எனவே, அரசும், தனி​யார் துறை​யும் இந்​தத் துறை​யில் இணைந்து பணி​யாற்ற வேண்​டியது அவசி​ய​மாகிறது. இவ்​வாறு அலெக்சாண்டர் வாங்​ பேசி​னார்​.

Spread the love