திஸ்பூர்: மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அதன்பின் திரிணமூல் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சாந்தனு சென் பதவியை ராஜினாமா செய்தார். திரிணமூல் மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், தீய செயல்பாடுகள்,
ஆர்ஜி கர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கை கையாண்ட விதம் ஆகியவை உட்பட பல விஷயங்களை காரணம் கூறிய சாந்தனு பதவியை ராஜினாமா செய்வதாக மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் அசாம் மாநில திரிணமூல் காங்கிரஸ் தலைவராக இருந்த அபிஜித் மஜும்தார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் மம்தாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் முஸ்லிம்களுக்காக மட்டுமே திரிணமூல் காங்கிரஸ் பணியாற்றியது. இதுபோன்ற சூழலில் என்னால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தொடர முடியாது’’ என தெரிவித்துள்ளார்.

More Stories
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ல் பதவியேற்பு
கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடப்படாதது குறித்து ஆளுநர் அர்லேகர் அதிருப்தி
இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்