பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கால்பந்து உலகக்கோப்பை இன்று முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.
ஜூன் 11 முதல் கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக்கோப்பை 48 அணிகளுடன் துவங்குகிறது. இத்தாலி தகுதி இழந்த அதிர்ச்சி நடுவே உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் முதல்முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளன. 39 நாட்கள் நீளும் தொடரில் 1248 வீரர்கள் பங்கேற்க, சாம்பியன் அணிக்கு ரூ.476 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11-ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு உலககோப்பையை முதல்முறையாக கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

கால்பந்து உலகக்கோப்பை 2026
அதேபோல இதற்கு முன்னர் வரை உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கால்பந்து உலகக்கோப்பைக்கு 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்குப் பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல்முறையாக இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.

More Stories
T20 W WC | இன்று தொடக்கம்.. 12 அணிகள் பங்கேற்பு.. முதல் போட்டியில் ENG – SL மோதல்!
இந்திய யு-19 அணியில் அன்வே திராவிட்
ஹை-டெக் உலகக் கோப்பை | FIFA WC 2026