பெதுல்: ம.பி.யில் நச்சுச்தன்மை கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் கோமா நிலைக்குச் சென்ற 4 வயது சிறுவன் நான்கு மாதங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கோமா நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இது குறித்து பெதுல் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் ஹர்மேட் கூறுகையில், “நாக்பூரில் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும்” என்றார்.
கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்ட 24-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது சின்வாரா எல்லைப்பகுதியில் உள்ள திகாபாரி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷும் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

More Stories
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு