February 19, 2026

தங்கம் திருட்டு விவகாரத்தில் ஐயப்பன் சும்மா விடமாட்டார்: நடிகர் ஜெயராம் கருத்து

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஜெய​ராம்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஜெய​ராம்.

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் உள்ள துவார பால​கர் சிலை தங்க முலாம்​கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்​லப்​பட்ட போது, தங்​கம் திருடப்​பட்​ட​தாக புகார்​கள் எழுந்​தன. இது தொடர்​பாக விசா​ரணை நடத்த கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை தொடர்ந்து சிறப்பு புல​னாய்வு குழு (எஸ்​ஐடி) அமைக்​கப்​பட்டு தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த வழக்​கில் கோயி​லின் முன்​னாள் தேவசம்​போர்டு அதி​காரி​கள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்​னிகிருஷ்ணன் போற்​றி, கர்​நாடக நகை வியா​பாரி கோவர்த்​தன் உள்பட பலர் கைது செய்​யப்​பட்​டனர். மேலும் இந்த சம்​பவத்​தில் நடிகர் ஜெய​ராமிட​மும் சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரணை நடத்​தி​யது.

இதற்​கிடை​யில் தங்​கம் கடத்​தல் விவ​காரத்​தில் கருப்பு பணம் புழக்​கம் இருந்​த​தா? என்​பது குறித்து அமலாக்​கத்​துறை விசா​ரணை​யில் இறங்​கியது. இதையடுத்து, கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் ஆஜராக வேண்​டும் என்று ஜெயராமுக்கு சம்​மன் அனுப்​பியது.

இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் ஜெய​ராம் கொச்​சி​யில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கத்​தில் ஆஜரா​னார். அதி​காரி​கள்​ அவரிடம் விசாரணை நடத்தினர்.

முன்​ன​தாக அவர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்த வழக்​கில் தவறு செய்​தவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​கள் கைது செய்​யப்பட வேண்​டும். ஐயப்பன் அவர்​களை சும்மா விட​மாட்​டார்.

பல ஆண்​டு​களாக பல கோயில்​களில் நடை​பெறும் பூஜைகளுக்கு அழைக்​கப்​படு​வ​தால் கலந்து கொள்​கிறேன். அது​போல சபரிமலை தொடர்​பான ஒரு பூஜைக்​காக என்னை அழைத்​தனர். உன்​னிகிருஷ்ணன் போற்றி உள்​ளிட்​டோர் பல முறை இப்​படிப் பூஜைகளுக்கு என்னை அழைத்​துள்​ளனர்.

அதில், ஏதேனும் தவறு நடந்து இருந்​திருக்​கிறதா என்​பதை நீதி​மன்​ற​மும், விசா​ரணை அமைப்​பு​களும் விசா​ரித்து வரு​கின்​றன. உண்மை வெளிச்​சத்​துக்கு வர வேண்​டும். குற்​ற​வாளி​கள் நீதி​யின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள் என்ற நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்

Spread the love