நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன் மெத்தை பகுதியில், மல்லிகா என்பவர் தமது இரண்டரை பவுன் தங்கச் செயினை தவறவிட்டதாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் உட்கோட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம், மல்லிகா அவர்கள் தவறவிட்ட இரண்டரை பவுன் தங்கச் செயினை கண்டுபிடித்து, தேவையான சரிபார்ப்புகளுக்குப் பிறகு பள்ளிபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கௌதம் அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் இந்த சிறப்பான மற்றும் துரிதமான நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சு. விமலா.இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காவல்துறையின் இந்த செயற்பாடு பொதுமக்களிடையே நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

More Stories
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முழு சொத்து மதிப்பு விவரங்கள்
‘ஹிட்’ ஆனதா ரூ.8000 கூப்பன்? – சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
இராசிபுரம் : அருந்ததியர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் …