May 11, 2026

“திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் கட்சி” – நரேந்திர மோடி விமர்சனம்

பெங்களூரு: ​தி​முக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​விட்​டது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

கர்​நாடக தலைநகர் பெங்​களூரு​வில் பாஜக தொண்​டர்​கள் மத்தியில் நேற்று பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுமார் 30 ஆண்டுகள் காங்​கிரஸ், திமுக கட்​சிகள் இடையே கூட்​டணி நீடித்தது. கடந்த 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை திமுக ஆதரவுடன் மத்​தி​யில் காங்​கிரஸ் கூட்​டணி அரசு ஆட்சி நடத்தியது. தற்​போது தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​குப் பிறகு திமுக கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் திடீரென வெளியேறி உள்​ளது. அந்த கட்சி சந்​தர்ப்​ப​வாத கட்சி ஆகும்.

ஆட்​சி- அதி​காரத்​துக்​காக அணி மாறும் கட்​சி. தற்​போது திமுக​வின் முதுகில் காங்​கிரஸ் குத்​தி​யிருக்​கிறது. அந்த கட்சி ஒட்டுண்ணி போன்​றது. ஏதாவது ஒரு கட்​சி​யின் முதுகில் ஏறி பயணம் செய்​யும். இறு​தி​யில் அந்த கட்​சி​யின் முதுகிலேயே காங்கிரஸ் குத்​தும். கேரளா​வில் காங்​கிரஸ் கூட்​டணி ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் ஆட்சி செய்​யும் காங்​கிரஸ் அரசு உட்​கட்சி பூசலால் பல்​வேறு பிரச்​சினை​களை சந்​தித்து வரு​கிறது. கடந்த 3 ஆண்டுகளாக கர்​நாடக மக்​களின் பிரச்​சினைக்கு தீர்வு காண எந்த முயற்​சி​யும் எடுக்​கப்​பட​வில்​லை. உட்​கட்சி பூசல் விவகாரங்களில் மட்​டுமே கவனம் செலுத்தி வரு​கிறது. பாஜகவின் நல்​லாட்​சி​யால் பல மாநிலங்​களில் தாமரை மலர்ந்து வரு​கிறது. மேற்​கு​வங்​கத்​தில் முதல்​முறை​யாக பாஜக அரசு பதவியேற்று உள்​ளது. கேரளா​வில் பாஜக எம்​எல்​ஏக்​களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்​திருக்​கிறது. இந்த எண்​ணிக்கை மேலும் உயரும்.

ஆந்​தி​ரா, புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. குஜ​ராத் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் பாஜக ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த மக்​கள​வைத் தேர்​தலின் அடிப்படை​யில் கர்​நாட​கா, தெலங்​கா​னா​வில் பாஜக 2-வது இடத்தில் உள்​ளது.

சுமார் 40 ஆண்​டு​களுக்கு முன்பு காங்​கிரஸ் கட்சி 400 மக்களவைத் தொகு​தி​களில் வெற்றிபெற்​றது. கடந்த 3 மக்களவைத் தேர்​தல்​களில் அந்த கட்​சி​யால் 100 தொகு​தி​களைக்​கூட தாண்ட முடிய​வில்​லை. ஆனாலும் காங்​கிரஸின் ஆணவம் குறைய​வில்​லை. தங்​களது தோல்விக்கு ஒட்​டுமொத்த உலகத்தையும் அந்த கட்சி குற்​றம் சாட்டி வரு​கிறது.

மக்​களை ஏமாற்​று​வ​தில் காங்​கிரஸ் கைதேர்ந்து விளங்​கு​கிறது. கர்​நாடக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பல்​வேறு வாக்​குறு​தி​களை அள்​ளி ​விசி அந்த கட்சி ஆட்​சி​யைப் பிடித்​தது. ஆனால் 3 ஆண்​டு​களாகி​யும் வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

பெட்ரோல் சிக்கனம் அவசியம்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ரூ.9,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மேற்கு ஆசிய போரால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அந்நிய செலாவணியை சேமிக்க முடியும்.

சமையல் காஸ் தட்டுப்பாடு இன்றி கிடைக்க குழாய் காஸ் இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Spread the love