
சென்னை: வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.19) காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் சேகர்பாபு உள்ளிட்டோர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
தேமுதிக கடந்து வந்த பாதை: கடந்த 2011-ம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் தேமுதிக தான் எதிர்கொண்ட முதல் சட்டப்பேரவைத் தேர்தலிலேயே 29 எம்எல்ஏ.க்களுடன் வலுவான அரசியல் பயணத்தைத் தொடங்கியது.
ஆனால், அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக் கூட்டணியாக களம் கண்டு தோல்வியை சந்தித்தது.
2021-ல் அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. வரும் தேர்தலில் 7 தொகுதிகள் வரையிலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Stories
துரோகிகளை வேரறுப்போம்.. சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு
இந்த தேர்தல் கடுமையான போட்டி நிலவும் தேர்தலாக இருக்கும்! கார்த்தி சிதம்பரம்…
நல்வரவு – நல்லுறவு: தேமுதிகவை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்