தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம் தொடக்கம்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டம் தொடக்கம். படம்: DNS
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 9) வழங்கினார்.
மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டம் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என மொத்தம் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பயன் பெறவுள்ளனர்.
திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உணவு வாகனத்தை கொடியசைத்து முதல்வர் தொடக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து உணவு விரிவாக்க திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, டி.ஜே.கோவிந்தராஜன், சுதர்சனம், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸிரி, நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆணையாளர் தாமோதரன், நகர் மன்ற துணைத்தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
அனுமதி பெறாத கொடிக் கம்பங்கள் அகற்றக் கோரிய வழக்கு: 13 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்