August 23, 2026

பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு 

பழனி ஆகஸ்ட் 23

 பழனி அடிவாரம் பாளையத்தில் உறங்காப் புளியான் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அன்னதான விருந்து, குத்து விளக்கு பூஜை, உலக நன்மைக்காக சிறப்பு யாகம் போன்றவைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பழனி தொகுதி ரவி மனோகரன் எம் எல் ஏ பங்கேற்றார். இதில் கோவில் பொறுப்பாளர் உறங்கடி சித்தர் சுராங்கனி கணேசன் மற்றும் விழா குழுவினர் பங்கேற்றனர். 

Spread the love