நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி மார்ச் 25
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா நாளை மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் புகழ்பெற்றது பங்குனி உத்திரம் திருவிழாவாகும். இத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் சிறு சிறு குடங்களில் நீரை சேகரித்து, பின்பு அதை தீர்த்த காவடியாக மேளதாளம் முழங்க, பழனிக்கு எடுத்து வருவார்கள். பின்பு தீர்த்தக் காவடி நீரை பழனி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். நாளை மார்ச் 26 ஆம் தேதி வியாழக்கிழமை பழனி திருஆவினன்குடி முருகன் கோயிலில் காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 31 ஆம் தேதி முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை, பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

More Stories
மதுரை கோட்டத்தில் ரயில்வே கேட்டுகளில் கண்காணிப்பு காமிரா பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்ய மதுரை கோட்டத்தில் சிக்னல் கட்டுப்பாடு இல்லாத 99 ரயில்வே கேட்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை அரியமான் செல்லும் சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோமுட்டியேந்தல் கண்மாயின் சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கிராம மக்கள் மற்றும் கண்மாய் சங்க நிர்வாகிகளின் முன்னிலையில், துவக்கி வைத்தார்.