பழனி பிப்ரவரி 25
பழனி அருகே உள்ளது குதிரை ஆறு அணை பூஞ்சோலை கிராமம். இங்கு உள்ள விவசாயிகள் பட்டா கேட்டும், வெளி நபர்களின் அச்சுறுத்தலை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு வழக்கறிஞர் மணிக்கண்ணன் தலைமை வகித்தார். இதில் விவசாயிகள் பழனிச்சாமி, சின்னமுத்து, கோட்டை முத்து, சுதா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலத்தில் கடந்த 60 வருடமாக விவசாயம் செய்து வருகின்றோம். ஆனால் முறையான பட்டா இல்லாததால், சில போலியான நபர்கள் எங்களைமிரட்டி, நிலத்தை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் ஆர்டிஓ வட்டாட்சியர் ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.

More Stories
திருச்சி பட்டாம்பூச்சி பூங்கா: ஏப்ரல் மற்றும் மே மாதம் முழுவதும் பார்வையாளர்களுக்கு அனுமதி!
சித்திரை திருவிழா எதிரொலி: மதுரையில் ஒரு கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா? இதை பாருங்க!
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டுஇன்று ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து