புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் மெய்ய நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து

ஆலங்குடி ஆர்.கே.மஹாலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் கழகத்தின் வெற்றிக்கான கருத்துக்களை எடுத்துரைத்து,’திராவிட மாடல்’ அரசின் சாதனை திட்டங்களை இல்லம் தோறும் சென்று பிரச்சாரப் பணியில் ஈடுபட்டும், மத்திய பாசிச பாஜக அரசின் தமிழ்நாட்டிற்கும் இழைக்கும் அநீதியை மக்கள் மத்தியில் கொண்டு சென்று பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

More Stories
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முழு சொத்து மதிப்பு விவரங்கள்
‘ஹிட்’ ஆனதா ரூ.8000 கூப்பன்? – சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
இராசிபுரம் : அருந்ததியர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் …