June 23, 2026

புத்துகோவில் புத்துமாரியம்மன் திருவிழாவை வருவதை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

நாட்றம்பள்ளி, மே.05-திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா புத்துக்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்துமாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற 15/05/2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் இன்று காலை11 மணி அளவில் திருமகள் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர்.மோகன்ராஜ் தலைமையில் கோயில் வருவாய் ஆய்வாளர் பாலாஜி செயல் அலுவலர் பாரி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் கோயில் நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசனை ஈடுபட்டனர்.

Spread the love