புதுடெல்லி: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை
செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-
ம் தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல்
பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி
தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளுமன்ற
விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் பேசும்போது, “அடுத்த
சில வாரங்களில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும். இதில்
முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாடாளுமன்றத்தின்
சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி, 18-ம் தேதி வரை நடைபெற
உள்ளது. இதில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816
ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டு
உள்ளது. இதன்மூலம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை முன்கூட்டியே அமல்படுத்த
முடியும்.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி
மக்களவையில் மூன்றில் ஒரு பகுதி இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட
வேண்டும். புதிய மசோதாக்களின்படி மக்களவைத் தொகுதிகளின் இடங்கள் 816 ஆக
அதிகரிக்கும். இதில் 273 இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு
மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவைத் தொகுதிகளை 816 ஆக அதிகரிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஏப்.16-ல்தொடக்கம்

More Stories
2026 தமிழக சட்டமன்ற தேர்தல்: சென்னையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மையக்குழு கூட்டம்!
மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் மருமகன் அபிஷேக்
“முதல்வராக தொடர்வேன்” – சித்தராமையா திட்டவட்டம்