ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சாலையோர கடைகளில் கார் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கோர விபத்தில் இருவரின் கால்கள் துண்டாகின.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சாலையோர கடைகளில் கார் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கோர விபத்தில் இருவரின் கால்கள் துண்டாகின. பரபரப்பான பேருந்து நிலையப் பகுதியில், பொதுமக்களுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவத்தில் நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – குண்டாறு கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூவர், காரில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். போகும் வழியில் கமுதி பேருந்து நிலையம் அருகே போதையில் மூவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காரை பாதியில் நிறுத்தியவர்கள், போதையில் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்