புதுடெல்லி: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று காலையில் டெல்லி சென்றார். மேகேதாட்டு அணை திட்டம், மகதாயி அணை திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவது குறித்து நீர்ப்பாசன துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமை வழக்கறிஞர் சசிகிரண் ஷெட்டி, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் மேகேதாட்டு விவகாரம், காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினை, வறட்சி நிலவரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மாலையில் கர்நாடகாவை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டினார்.
அப்போது டி.கே.சிவகுமார், “கர்நாடகாவில் நிலவும் வறட்சி குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து வறட்சி நிவாரண நிதியை பெற அனைவரும் குரலெழுப்ப வேண்டும். அதேபோல் காவிரி நதிநீர் பங்கீட்டு சிக்கல், மேகேதாட்டு விவகாரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
கர்நாடக பவனில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா கரந்தலாஜே, துணை முதல்வர் பரமேஷ்வர், காங்கிரஸ் எம்.பி ஜெய் ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

More Stories
ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு.!!
சிஜேபியை தொடர்ந்து இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரல்
பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’வுக்கு மத்திய அரசு சம்மன்.