தமிழக வெற்றி கழகத்துக்கு அதிமுகவின் அதிருப்தி அணியில் உள்ள 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது பல விதமான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக பலரும் தொடர்ந்து கருத்துக்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கார்த்திக் சிதம்பரமும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது தொடர்பாக பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியதை தொடர்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. இதனையடுத்து சமீபத்தில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் சமயத்தில் தவெகவுக்கு ஆதரவாக அதிமுகவை சார்ந்த 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்களை உருவாக்கிய நிலையில், அதிருப்தியில் உள்ள அதிமுகவினர் ஆதரவினை விஜய் பெற்றது தவறு என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த கார்த்திக் சிதம்பரம் எம்பி, அதிமுக ஆதரவினை தவெக பெற்றுள்ளது சம்பந்தமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தற்போது அவர் பேசுகையில், “என்னை பொறுத்த வரைக்கும் விஜய் தவெக மற்றும் ஏற்கனவே ஆதரவு கொடுத்த ஐந்து கட்சிகளுடன் ஆட்சியை நடத்தலாம். அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த 25 பேர் அளித்த வாக்கு அவருக்கு தேவையே கிடையாது. தவெகவை தவிர்த்து விட்டு வேறு யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
அவர் ரிலாக்ஸாக இருக்கலாம். அதிமுக 25 எம்எல்ஏக்கள் வந்தால் மட்டுமே இந்த ஆட்சி நிலையானதாக இருக்கும் என்ற நிலை இல்லவே இல்லை. நிச்சயமாக அவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுத்த தேவையே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் கார்த்திக் சிதம்பரம். மேலும், மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை. அதுனால தற்போது பிரிந்து வந்திருப்பவர்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுப்பது மக்கள் தீர்ப்புக்கு விரோதமான முடிவாகவே நான் பார்க்கிறேன் என திட்டவட்டமாக தனது கருத்தினை கூறியுள்ளார்.
மேலும் தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் குறித்தும் பேசியுள்ளார் கார்த்திக் சிதம்பரம். இதுப்பற்றி அவர் பேசுகையில், ‘எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பு ஏற்றதில் இருந்து அதிமுக தொடர்ந்து நான்கு தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. இனிமேல் அவருடைய தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்று அந்த கட்சியில் உள்ளவர்களே நம்ப மாட்டார்கள். எனவே அந்த கட்சிக்கு தற்போது இக்கட்டான ஒரு நிலை. தலைமை மீது கட்சியில் உள்ளவர் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து கார்த்திக் சிதம்பரம் கூறுகையில் ஐந்து பேருக்குமே அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கருத்து தற்போது பெருமளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதே நேரம் அமைச்சரவையில் இடம் தருவது தொடர்பாக பேசுவதற்கு தவெக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்னும் சில தினங்களில் அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையில் கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து அதிமுகவினருடைய ஆதரவு தமிழக வெற்றி கழகத்துக்கு தேவையே இல்லை என தொடர்ந்து பேசி வருகிறார். அதோடு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் வெளியில் இருந்து தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கலாம். மற்றபடி அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கக்கூடாது என அவரும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
“முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யாரென்று தெளிவுபடுத்துக” – விஜய்க்கு பிரேமலதா வலியுறுத்தல்
குதிரை பேரம் நடத்த தவெகவுக்கு அவசியம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
100 நாள் வேலை திட்டத்துக்கு ஜூன் 30-ல் முடிவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு