அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்த நிலையில்,இன்று அன்புமணியும் டெல்லி செல்ல உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 17 தொகுதிகளும் ,டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 9 தொகுதிகளும், தாமாகவுக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.
குறிப்பாக 234 தொகுதிகளில் அதிமுக சுமார் 120 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளதாகவும், மீதமுள்ள 64 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 64 தொகுதிகளில் பாஜக, பாமக, அமமுக ஆகியவற்ற தவிர்த்து மீதமுள்ள 7 இடங்களை புதிய நீதி கட்சி, ஐ ஜே கே ,புரட்சி பாரதம் ,தென்னிந்திய பார்வேர்ட் பிளாக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றன.
Explore Index FundsHDFC Mutual Fundமேலும் சில சிறிய கட்சிகள் இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் திமுக போடும் Strategy!
ஆனால், பாஜக அதிமுகவிடம் 60 தொகுதிகள் வரை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மத்திய அமைச்சரும் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழக வர இருந்தார். ஆனால், வரவில்லை. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இன்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது என்ன ஆலோசிக்கப்பட்டது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இன்னும் வேறு புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா? தவெக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்ததே? அப்படியெல்லாம் கிடையாது. நீங்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்களே தவிர, நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாங்களும் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்லிவிட்டோம். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டார்… தவெக தலைவரும் சொல்லிவிட்டார். ஆனால் நீங்கள்தான் விடமாட்டேன் என்கிறீர்கள் என்று கூறினார்.
https://tamil.samayam.com/in-focus/poll?msid=129691802&host=tml&platform=desktop&isamp=false&showheading=true&prodenv=true&pollSecCategory=latest-news|state-news
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் பலர் தமிழகத்துக்கு வரப் போவதாக செய்திகள் வருகின்றன. இது பிரச்சாரத்துக்கு எந்த அளவுக்கு வலு சேர்க்கும் என்ற கேள்விக்கு? முதலில் தொகுதிப் பங்கீடு முடிய வேண்டும். எந்தெந்த தொகுதி யாருக்கு என்று தீர்மானித்த பிறகுதான் இதெல்லாம் முடிவாகும் என்று கூறினார்.
தேமுதிக கூட்டணியில் சேராததால், அவர்களுக்குக் கொடுப்பதர்கான வைத்திருந்த இடங்களை பாமக, அமமுக கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பீர்களா? இதுபோன்ற கற்பனையான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 4 நாட்களில் நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வீர்கள். திமுக தலைமையில் அமைக்கும் கூட்டணி மாதிரி எங்கள் கூட்டணி இல்லை. சைலன்டா, அழகா, அற்புதமாக கூட்டணி பேசுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு பட்டியல் வெளியிடப்படும். எங்கள் கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, யார் யாருக்கு எந்தெந்த இட்த்தில் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அந்தந்த தொகுதியை அவர்கள் பெறுவதுதான் எங்கள் நோக்கம் என்று கூறினார்.
தொடர்ந்து அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் எதற்காக அமித் ஷாவை பார்க்க வருகிறார்கள்?
தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதுகுறித்து கலந்து பேச வருகிறார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அன்புமணி மற்றும் தினகரன் அடுத்தடுத்து டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தால்..- ஆதவ் அர்ஜூனாவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு!
“அதிமுகவை எதிர்க்க இயலாமல் ‘டெல்லி அணி’ என திசை திருப்புகிறார் முதல்வர்” – டிடிவி தினகரன்
தமிழ்நாடு என்ன பாடுபடும்?- எடப்பாடி பழனிசாமியின் டெல்லி விசிட்டைக் விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்