ஹார்திக் பாண்டியா நிகழ்த்திய சாதனை குறித்து…

இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பேட்டிங்கில் 23 பந்துகளில் அரைசதம் அடித்த பாண்டியா பந்துவீச்சில் 3 ஓவர்களுக்கு 21 ரன்கள் மட்டுமே வழங்கினார்.
ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீசியது. இந்திய அணி 256/4 ரன்கள் குவிக்க, ஜிம்பாப்வே அணி 184/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் பேட்டிங்க், பந்துவீச்சு என அசத்திய ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
இந்த உலகக் கோப்பையில் ஹார்திக் பாண்டியாவுக்கு இது இரண்டாவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.Advertise with us
முன்னதாக நமீபியாவுக்கு எதிராகவும் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார்.

More Stories
இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20-ல் மோதல்
வீரர்கள் பொறுப்பை உணர்ந்துள்ளனர்… மெல்ல மெல்ல முன்னேறி வருகிறோம்’ – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி – ஹைலைட்ஸ் பார்வை