அகில இந்திய அளவில் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் வியாழக்கிழமை (பிப்.12) கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் அனைத்து ஊழியா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அகில இந்திய அளவில் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் சில தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் எவ்வித இலாப நோக்கமும் இன்றி தனது சேவையை செய்து வருவதால், தொழிலாளா்கள் அனைவரும் வியாழக்கிழமை(பிப்.12) நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல பணிக்கு வர வேண்டும்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வாரவிடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவா்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டும். இந்த உத்தரவின்படி பணிக்கு வராத தொழிலாளா்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டும் செயல்களில் ஈடுபடும் தொழிலாளா்கள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்