April 3, 2026

ஈரானிடம் இருந்து மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி? – 6 லட்சம் பேரலுடன் குஜராத் வருகிறது கப்பல்

Follow Us

புதுடெல்லி: ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் குஜராத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேற்கு ஆசி​யா​வில் போர் மேகங்​கள் சூழ்ந்​துள்ள நிலையில், இந்​தியா – ஈரான் இடையி​லான கச்சா எண்​ணெய் வர்த்​தகம் மீண்​டும் உயிர் பெறத் தொடங்கியுள்ளது. சுமார் 6 லட்​சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ஈரானிலிருந்து புறப்​பட்ட கப்​பல் ஒன்று நாளை மறு​நாள் அதாவது வரும் 4-ம் தேதி குஜ​ராத் துறை​முகத்​திற்கு வரவுள்​ள​தால், இரு நாடு​களுக்கு இடையி​லான எண்​ணெய் வர்த்தக உறவு தற்​காலிக​மாகப் புதுப்​பிக்​கப்​படலாம் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

ஈரானின் கார்க் தீவிலிருந்து ‘பிங் ஷுன்’ என்ற கப்​பல் குஜராத்​தின் வாடி​னார் துறை​முகத்தை நோக்கி வந்து கொண்​டிருக்​கிறது. இந்​தக் கச்சா எண்​ணெயை வாங்குவது யார் என்​பது குறித்து அதி​காரப்​பூர்​வத் தகவல்கள் இல்​லை. எனினும், வாடி​னார் பகு​தி​யில் ரஷ்யாவின் ஆதர​வுடன் செயல்​படும் நயாரா எனர்ஜி சுத்தி​கரிப்பு நிலை​யம் அமைந்​துள்​ளது கவனிக்​கத்​தக்​கது.

மேலும், இங்​கிருந்​து​தான் மத்​தி​யப் பிரதேசத்​தின் பினா பகு​தி​யில் உள்ள பாரத் பெட்​ரோலி​யம் உள்​ளிட்ட உள்நாட்டு சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்​குக் கச்சா எண்ணெய் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. சந்​தைக் கணிப்பு நிறு​வன​மான ‘கெப்​லர்’ தரவு​களின்​படி, இந்​தக் கப்​பலின் இறுதி இலக்கு குஜ​ராத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்​பினும், சர்​வ​தேசத் தடை​யில் உள்ள எண்​ணெயைக் கொண்டு வரும் கப்​பல்​கள், பிடிப​டா​மல் இருக்​கப் பயணத்தின் பாதி​யிலேயே தங்​கள் இலக்கை மாற்​றிக்​கொள்​ளும் வழக்​கத்​தைக் கொண்​டுள்​ள​தால், இதில் கூடுதல் கவனம் தேவைப்​படு​வ​தாக நிபுணர்​கள் எச்சரிக்கின்​றனர். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் மேற்​கத்​திய நாடு​கள் விதித்த கடும் பொருளா​தா​ரத் தடைகளுக்​குப் பிறகு, இந்​தியா ஈரான் எண்​ணெயை வாங்​கு​வதை நிறுத்​தி​யிருந்​தது.

தற்​போது ஈரான் – அமெரிக்​கப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளா​விய எரிசக்​தித் தட்​டுப்​பாட்​டைப் போக்க, ஏற்​கெனவே ஏற்​றப்​பட்ட சரக்​கு​களுக்கு மட்​டும் அமெரிக்கா ஏப்​ரல் 19 வரை 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. இதனைப் பயன்​படுத்தி இந்​தியா இந்த கச்சா எண்ணெயை வாங்​கி​யிருக்​கலாம்​ என்​று கூறப்படுகிறது.

Spread the love