April 2, 2026

ஈரான் போர் தாக்கம்: மார்ச் மாதம் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ரூ.51 லட்சம் கோடி இழப்பு

மும்பை: அமெரிக்​கா-இஸ்​ரேல் மற்​றும் ஈரான் நாடுகளிடையே ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுபோல இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்​தில் கடும் வீழ்ச்சியை சந்​தித்​துள்​ளன. மார்ச் மாதம் தொடர்ந்து 5 வாரங்​களாக சரிவை எதிர்​கொண்ட பங்​குச் சந்​தை, முதலீட்டாளர்​களுக்​குப் பேரிழப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பிஎஸ்​இ-​யில் பட்​டியலிடப்​பட்ட நிறு​வனங்​களின் மொத்த சந்தை மதிப்பு மார்ச் மாதத்​தில் ரூ.463 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.412 லட்​சம் கோடி​யாகச் சரிந்​துள்​ளது. இதன் மூலம் ஒரு மாதத்​தில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.51 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. குறிப்​பாக, வெளிநாட்டு முதலீட்​டாளர்​கள் கடந்த மார்ச் மாதத்​தில் மட்டும் சுமார் ரூ.1.2 லட்​சம் கோடி மதிப்​பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்​பப் பெற்​றுள்​ளனர்.

இது முன்​னெப்​போதும் இல்​லாத அளவி​லான மிகப்​பெரிய எப்ஐஐ வெளி​யேற்​ற​மாகும். ஏப்​ரல் மாத நில​வரம்? அதிர்ச்சி தரும் மோச​மான செய்​தி​கள் அனைத்​தும் ஏற்​கெனவே சந்தை​யில் எதிரொலித்​து​விட்​ட​தால், இனி வரும் நாட்களில் சந்தை மேலும் சரி​யாமல் ஒரு குறிப்​பிட்ட நிலையில் நீடிக்க வாய்ப்​புள்​ளது. எனினும், சந்​தை​யில் உடனடி ஏற்றத்தை எதிர்​பார்க்க முடி​யாது.

மத்​திய கிழக்​கில் போர் பதற்​றம் தணிந்​து, அமை​திப் பேச்​சு​வார்த்​தைகள் தொடங்​கி​னால் மட்​டுமே சந்​தை​யில் சாதக​மான மாற்​றங்​களை எதிர்​பார்க்க முடி​யும். வெளிநாட்டு முதலீட்​டாளர்​களின் வரத்​து, நிறுவனங்களின் லாப விகிதம் மற்​றும் கச்சா எண்​ணெய் விலை ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டே ஏப்​ரல் மாதத்​தின் நகர்​வு​கள் அமை​யும் என்று சந்தை நிபுணர்​கள்​ கருத்​து தெரிவித்துள்ளனர்​.

Spread the love