March 3, 2026

ஈரோட்டில் செங்கோட்டையன் தான் வேட்பாளர்? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் சிக்னல் – விஜய் முடிவு என்ன?

ஈரோட்டில் தவெக நிர்வாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் போட்டியிட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக வெற்றிக்கழக ஈரோடு கிழக்கு தொகுதி செயல்வீர்ர்கள் கூட்டத்தில் கொங்கு மண்டல பொருப்பாளரும் , நிர்வாக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையில், விஜய் முதல்வரால் ஆவதை யாரலும் மாற்ற முடியாது. எந்த பாதையில் பயணம் செய்தால் நல்லது. என்னை தூக்கி எறிந்தார்கள். என்னை தாக்கி பிடித்தவர்கள் விஜய் .விஜய் தான் நிரந்த முதல்வர் என்று கூறினார்.

  

Open an account today!Interactive Brokersதொடர்ந்து பேசிய அவர் , திமுகவை வீழத்துகிற சக்தி தவெகவிற கு தான் உண்டு.சட்டமன்ற தேர்தல் அனைத்து தர மக களின் கண்ணீரை துடைக்கின்ற தேர்தல். ராணுவ கட்டுப்பாட்டுடன் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது.வெற்றி இலக்கை அடைய எட்டு தொகுதிகளில் தவெக தலைவர் தான் ஆளப்போகிறார்.தவெக தலைவர் விஜய் தமிழகத்தை ஆளப்போகிறார்.2026ல் தேசியக்கொடியை ஏற்றவுள்ளார்.

மேலும், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் எங்களுடன் வருவதாக தெரிவித்தார்.திமுக அதிமுக தவெகவுடன் இருக்கிறார்.அவரின் பெயரை சொன்னால் நன்றாக இருக்காது.தவெக தலைவர் எழுதி வைத்து பேசுவது விமர்சனத்திற்குள்ளான நிலையில் எந்த தலைவர் அப்படி செய்யவில்லை?என கேட்டவர்.திமுக உள்பட வேறு எந்த கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமர் இப்படி இல்லாமல் பேசியுள்ளனரா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர் ,அதிகார மற்றும் பண பலம் உள்ள திமுகவை வீழ்த்த தவெகவால் முடியும் என்பதற்கு காரணம் தவெகவில் இருப்பது சிங்கக்குட்டிகள் சீறிப்பாயும் என்றார்.மேலும் ஈரோட்டில், 8 தொகுதிகளை தன்னுடைய ரத்தத்தை சிந்தி தமிழக வெற்றிக் கழகத்தை வெற்றிபெற செய்வேன் என்று கூறினார். மேலும், அந்த பொதுக்கூட்டத்தில், ஈரோட்டில் செங்கோட்டையன் போட்டியிட வலியுறுட்த்தப்பட்டது.

காங்கிரஸ் vs திமுக…இது தான் CLIMAX?
சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுப்பட்டு வருகிறார். அந்த வகையில், வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே தவெக தலைவர் விஜயின் மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்பட்டவில்லை. தொடர்ந்து, தஞ்சை நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தொடர்ந்து தவெக தலைவர் விஜய், சேலம் மற்றும் வேலூர் நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மேலும், செயல்படுத்தமுடியாததை வாக்குறுதிகளாக அளிக்கமாட்டோம் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தவெக தேர்தல் அறிக்கை தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கெனவே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்கு முனைப்போட்டி நிலவ உள்ளத்யு. விஜயின் வருகையால் திமுக மற்றும் அதிமுகவில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் தவெக தேர்தல் அறிக்கை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Spread the love