உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றிக்கழகம் சாதனை படைத்தது. கட்சி தொடங்கி 2 1/2 ஆண்டுகளில் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது இதில் அதிமுக நாற்பத்தி ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றது அதிமுக இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமாக 53 இடங்களை மட்டுமே கைப்பற்றி அதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
உச்சத்தை எட்டியுள்ள உட்கட்சி மோதல்
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பதவியேற்றிலிருந்து சுமார் 11 தேர்தல்களில் அதிமுக தோல்விகளையும் தொடர்ந்து பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது இது அதிமுக முக்கிய புள்ளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது மேலும் பொது செயலாளர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுப்பப்பட்டது.
dmk வேட்பாளர் வீட்டில் திருட்டு Climax -ல் நடந்த Twist !
இதனால் தற்போது அ.தி.மு.க.வில் தற்போது உள்கட்சி பிரச்சனை தீவிரமாகியுள்ளது. ஒரு பக்கம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், மற்றொரு பக்கம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலும் கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் நடந்த தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள்
அதே சமயம், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தவெகவுக்கு எதிராக திமுக கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார். ஆனால் நாங்கள் ஏற்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் தோல்விகான காரணத்தை கண்டறிய அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினர். ஆனால் இதற்கு அவர் செவிசாய்க்கவில்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் தனித்தனியாக மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மேலும், பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்காக, கட்சியின் 5-ல் 2 பங்கு உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெற்றுள்ளதாக வேலுமணி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்களை பொறுப்புகளில் இருந்து நீக்கினார். இது அதிமுகவில் உச்சக்கட்ட மோதலுக்கு வழிவகுத்தது.
மேலும், அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் எந்த நேரத்திலும் என்னவேண்டுமானலும் நடக்கலாம் என்ற பரப்பரப்பான நிலையில் இருப்பதால், அங்கு பலத்த போலிஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More Stories
அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் முதல்வர் விஜய்.. கேடு கெட்டத்தனமான அரசியல்.. அன்பழகன் கடும் விமர்சனம்
அதிமுக ஆதரவு தவெகவுக்கு தேவையே கிடையாது.. மக்கள் தீர்ப்புக்கு விரோதமானது.. கார்த்திக் சிதம்பரம்
“முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யாரென்று தெளிவுபடுத்துக” – விஜய்க்கு பிரேமலதா வலியுறுத்தல்