சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்குளத்தூர் யார்டில் பொறியியல் பணி நடைபெறுவதால், கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு இன்று (25-ம் தேதி) காலை 10.56, பகல் 11.40, நண்பகல் 12.28 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி -செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு நண்பகல் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு இன்று நண்பகல் 12, மதியம் 1.10, 1.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு மதியம் 2.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

More Stories
முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம் – பிரதமர் மோடியை சந்திப்பதாக தகவல்
“விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை” – இபிஎஸ் குற்றச்சாட்டு
மகளிர் உரிமை தொகை: புதிய விண்ணப்பங்கள் பெறுவது எப்போது?