கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு. ஒட்டன்சத்திரம் ஏப்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தயத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் 136 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு தலித் விடுதலை இயக்க மாநில துணை தலைவர் தலித் கே.ராமர் தலைமை வகித்து டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சட்டமாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம்,தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் எஸ்.கருப்பையா, மாவட்டத் தலைவர் தேவத்தூர் கே.ராஜேந்திரன், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.மதுமோகன் மாவட்ட பொருளாளர் எஸ்.காளிமுத்து, தொப்பம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய பொருப்பாளர் செல்வகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மங்கள இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழைப்பாடும் வகையில் மங்கள இசை வாத்தியங்களுக்கான தவில்,நாதஸ்வர கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு இசை வாத்தியங்கள் வாசித்தனர். விழாவில் கலந்து கொண்ட சுமார் 1000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு

More Stories
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகளின் விபரங்கள்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து அமைச்சர் ஒட்டன்சத்திரம் சக்கரபாணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இரா முத்தரசன் ஆகியோர் திண்டுக்கல் பாரதிபுரம், கலைஞர் நகர், சந்தை ரோடு பள்ளிவாசல், அண்ணாமலையார் ஸ்கூல் ரோடு, பொன் சீனிவாசா நகர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதி�
இடையகோட்டையில் அம்பேத்கர் 135 – வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.