March 15, 2026

கோவை செழியன் 26வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு, 

மார்ச் 14-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் கே. ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் துரை கதிரவேல், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவநாதன், சேலம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லப்பன், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பிரசாத், கோவை மாவட்ட தலைவர் ரவிக்குமார், செயலாளர் கொங்கு ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்விகுமார், மகளிர் அணி நிர்வாகி சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Spread the love