சோழவந்தான் மார்ச் 9
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளாளர் முன்னேற்ற கழக அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது தென்னக மக்கள் இயக்கம் தென்மாவட்ட வ உ சி பேரவை உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற வெள்ளாளர் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டத்தில் சோழவந்தானில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி க்கு வெண்கல சிலை அமைக்க வேண்டும், சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு அரசன் சண்முகனார் பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிர் தினத்தை ஒட்டி நடைபெற்ற மாநாட்டிற்கு மாநில மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் தலைமை வகித்தார் .ஹரி ஹருண் பிள்ளை வேளச்சேரி மாதவன் பிள்ளை துபாய் மதன் பிள்ளை முன்னிலை வகித்தனர் .சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் புல்லட் ராம்குமார் மதன் பிள்ளை
உள்ளிட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பரவை நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தென்மாவட்ட வ உ சி பேரவை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
மடப்புரம் அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் முடித்து வைப்பு
முதியோர் உதவித்தொகை-3200 ரூபாய் வரவு வைப்பு-முக ஸ்டாலின் அறிவிப்பு!
10 லட்சம் தொண்டர்கள்.. 4 லட்சம் பேருக்கு உணவு! திருச்சியில் திமுகவின் அசுர பலம்- அமைச்சர் கே.என். நேரு தகவல்