சோழவந்தான் மார்ச் 31
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு அருள்மிகு உச்சிமா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு வந்தது திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குட ஊர்வலம் எடுத்து சோழவந்தான் 4 ரத வீதிகளில் வலம் வந்து ஜெனகைமாரியம்மன் கோவிலை அடைந்து பின்பு உச்சிமாகாளி அம்மன் கோவிலை அடைந்தனர் மேளதாளம் அதிர்வேட்டுக்கள் முழங்க பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஏற்பாடுகளை எம்வி எம் குழும தலைவர் மணி முத்தையா, எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் மருது பாண்டியன் நிர்வாகி வள்ளி மயில் மற்றும் பூமேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

More Stories
ஆண்டிபட்டி தொகுதி, கம்பம் தொகுதி வேட்பாளர்களுக்கு தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு.
திண்டுக்கல்லில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் க செல்வராஜ் அவர்களுக்கு திராவிட பாலு ஏற்பாட்டில் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் அவைத் தலைவர் நடராஜ் பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் வார்டு செயலாளர் குணராஜ் ராஜ்குமார் மற்றும் குப்புசாமி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட இருந்தனர்