April 21, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.23-ல் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

சென்னை: தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடைபெறும் ஏப்.23-ம் தேதி அனைத்து தொழிலா​ளர்​களுக்கும் சம்பளத்​துடன் கூடிய விடுமுறை வழங்​க வேண்டும் என்று தமிழக தொழிலகப் பாது​காப்​பு, சுகா​தார இயக்​குநர் செ.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்ள​தாவது: தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் ஏப்.23-ம் தேதி (வியாழன்) நடை​பெற உள்​ளது. இதையொட்டி, மாற்று முறை ஆவணங்கள் சட்டத்தின்படி அன்றைய தினம் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மக்கள் பிர​தி​நி​தித்​துவச் சட்​டத்​தின்​கீழ், தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி வெளி​யிட்​டுள்ள அறி​வுரைகளின்​படி, தமிழகம் முழு

வதும் உள்ள தொழிற்​சாலைகள், கட்​டு​மான நிறு​வனங்​கள் மற்​றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணி​யாற்​றும் தினக்​கூலி தொழிலாளர்கள், தற்​காலிக பணி​யாளர்​கள், ஒப்​பந்த தொழிலா​ளர்​கள் உள்ளிட்ட அனைத்து பணி​யாளர்​களும் வாக்​களிக்க வசதி​யாக தேர்​தல் நாளில் அவர்​களுக்கு சம்​பளத்​துடன் விடுமுறை வழங்குவது கட்​டாய​ம் ஆகும்.

எனவே, அனைத்து தொழிற்​சாலைகள், கட்​டு​மான நிறு​வனங்களும் வாக்​குப்​ப​திவு நாளான ஏப்​.23-ம் தேதி அனைத்து தொழிலா​ளர்​களுக்​கும் சம்​பளத்​துடன் விடுமுறை அளிக்க வேண்​டும்.

அவ்​வாறு விடு​முறை அளிக்​கத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். விடு​முறை அளிக்​காத நிறுவனங்​கள் குறித்து புகார் செய்ய வசதி​யாக தொழிலகப் பாது​காப்​பு, சுகா​தார இயக்​ககம் சார்​பில் மாநில அளவி​லான கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக புகார் தெரிவிக்க கட்​டுப்​பாட்டு அலுவலர்களை பொது​மக்​கள், தொழிலா​ளர்​கள் தொடர்​பு ​கொள்​ளலாம். அலு​வலர்​களின் பெயர், தொடர்பு எண் விவரம்: தொழிலகப் பாது​காப்​பு, சுகா​தா​ரத் துறை இணை இயக்​குநர்​கள் எம்.வி.கார்த்​தி​கேயன் (திரு​வொற்​றியூர்) – 9444221011, எஸ்​.கமலக்​கண்​ணன் (சென்​னை) – 9884675712, நிர்​வாக அலு​வலர் எஸ்.சூரியா (சென்​னை) – 9884470526, துணை இயக்​குநர் த.மணிசங்​கர் (காஞ்​சிபுரம்) – 9940468249. இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love