நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கபிலர்மலை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார்.
தற்போது திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி, தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நாமக்கல் நகர செயலாளர் ஆட்டோ ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்