August 5, 2026

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (Emergency Care and Recovery Centre – ECRC) திறப்பு விழா 

 திருப்பத்தூர், ஆகஸ்ட் -4

திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (Emergency Care and Recovery Centre – ECRC) திறப்பு விழா இன்று (04.08.2026) காலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. G. ரவிக்குமார், I.A.S., திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா. திருப்பதி, B.V.Sc., மருத்துவத் துறை உயரதிகாரிகள், அரசு அலுவலர்கள், The Banyan, BALM உள்ளிட்ட சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Spread the love