சென்னை: “அமைதியாகத் துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய இடம், ஒரு சர்க்கஸ் கூடமாக மாறியது வேதனையளிக்கிறது. அரசாங்கமும் திரைத்துறையும் ஒன்றிணைந்து, முறையான வழிகாட்டுதல்களை வகுத்து, உயிரிழந்தவர்களுக்கு உரிய கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும்” என இயக்குநர் பாக்யராஜ் இறுதி சடங்கு நிகழ்வுகள் குறித்து நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மிகவும் சிறப்பான 50 ஆண்டுகால நட்பு, ஒரு சிறந்த படைப்பாளி, மூத்த எழுத்தாளர், சினிமாவில் அற்புதமான எல்லைகளை வகுத்தவர், பல மகிழ்ச்சியான தருணங்களையும் சிறந்த படைப்புகளையும் என்னுடன் பகிர்ந்துகொண்டவர், அமைதியான மற்றும் உறுதியான விசுவாசத்துடன் என் குடும்பத்திற்கு எப்போதும் துணையாக நின்றவர் பாக்யராஜ்.
பாக்யராஜின் அதிர்ச்சிகரமான பிரிவு, அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அமைதியாக துக்கம் அனுசரிக்கப்பட வேண்டிய அந்த இடம், ஒரு சர்க்கஸ் கூடமாக மாறியது வேதனையளிக்கிறது. நாம் எப்போது, எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக மாறினோம்? அரசாங்கமும் திரைத்துறையும் ஒன்றிணைந்து, முறையான வழிகாட்டுதல்களை வகுத்து, உயிரிழந்தவர்களுக்கு உரிய கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
வயதான பெற்றோரை நம் சிந்தனை முறைக்கு மாற்றக் கூடாது: ஆர்த்தி வெற்றிமாறன் அறிவுறுத்தல்
“அறவழி போராட்டத்துக்கு அனுமதி மறுப்பதா?” – தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
“ராமநாதபுர சிறுமி உயிரிழப்பில் உண்மை குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்”: பிரேமலதா விஜயகாந்த்