லெபனான் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையே தீவிர கருத்து வேறுபாடுகளும் வார்த்தை மோதல்களும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் விரிசல் தீவிரமாகும் நிலையில், அமெரிக்க உளவு குற்றச்சாட்டுகள், ராணுவ உதவி குறைப்பு வாய்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க நிதியை நம்பாமல், இஸ்ரேல் தானே ஆயுதங்களை உற்பத்தி செய்து வலிமையைப் பெருக்க வேண்டும் என பிரதமர் நெதன்யக்கு வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் ; m.மீரா
அண்மையில் லெபனான் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக தீவிர கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இடையேயான உறவு மீண்டும் விரிசலைடைந்துள்ளது.

Trump & Masoud Pezeshkianweb
ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் ரகசிய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் ஈடுபட்ட உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள், நகர்வுகளை இஸ்ரேல் உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டியிருந்தது. இதனால் இஸ்ரேல் உளவு அச்சுறுத்தலை மிகவும் ஆபத்தானது என்று அமெரிக்கா குறிப்பிட்டிருந்தது. இந்த உளவு சம்பவத்துக்குப் பின் இஸ்ரேலுக்கான இராணுவ உதவியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தெற்கு லெபனானிலிருந்து படைகளைத் திரும்பப் பெறவும் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டது.
மேலும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்ததால் ட்ரம்ப்-க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மோதல்களினபோது ட்ரம்ப், நெதன்யாகுவை மிகக் கடுமையாக விமர்சித்ததாக தகவல்கள் வெளியாகின.

More Stories
வெனிசுலாவில் அடுத்தடுத்து பூகம்பம்: நிலைகுலைந்த நகரங்கள் – அவசரநிலை அறிவிப்பு
4 மாதங்களுக்குப் பிறகு., அயதுல்லா அலி காமேனி இறுதிச்சடங்கு.. பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு!!
’போரில் வென்ற ஈரான்..’ – 92%-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களின் கருத்தால் அதிர்ச்சி!