July 29, 2026

நல் கிராமவயல் சாலை: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட நல் கிராமவயல் கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சேதமடைந்த சாலையால் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளதுடன், பள்ளி மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதிலும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவை வாகனங்கள் கிராமத்திற்குள் வருவதிலும் சிரமம் நிலவுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love