பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு திமுக சார்பில் முதல் முறையாக பெண் வேட்பாளராக போட்டியிட கட்சி எனக்கு அனுமதி வழங்கியுள்ளது. நான் ஏற்கனவே இப்பகுதியில் நகராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்துள்ளேன்.
எனவே எனக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நன்கு தெரியும். நான் வெற்றிபெற்றால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக நிறைவேற்றுவேன். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளது. அதனால் ஒட்டு கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், பொதுமக்கள் திமுகவுக்குதான் ஓட்டளிப்பார்கள் என்பது, தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக பெண்களுக்கான திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பெண்கள் திமுகவுக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாமக்கல் சட்டசபை தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவாக பதவியேற்பேன் என அவர் கூறினார்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்