March 15, 2026

பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்

Spread the love