பழனிமார்ச் 21
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் தினேஷ் ஜெயின் பழனிக்கு வருகை புரிந்தார். வாக்குச்சாவடிகளின் மையமான பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டார். பின்பு அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து, தேர்தல் அலுவலரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கொடைக்கானல் ரோடு பகுதியில் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனைகளை ஆய்வு செய்தார்செய்தால். இதில் பழனி ஆர்டிஓ கண்ணன், நகராட்சி ஆணையர் டிட்டோ, தாசில்தார் சக்திவேலன், ஆகியோர் உடன் இருந்தனர்.
=========
பழனி பகுதியில் அணைகளின் நீர்மட்டம் குறைகிறது
பழனி மார்ச் 21
பழனி பகுதியில் வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணை, குதிரை ஆறு அணை ஆகிய மூன்று அணைகள் உள்ளது. இந்த அணைகளின் நீர், குடிநீராகவும், விவசாயத்திற்கும், பயன்பட்டு வருகிறது. தற்பொழுது பழனி பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. வெயில் கொளுத்துகிறது. இதன்படி 65 அடி உயரம் கொண்ட பாலாறு பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 9 அடியாக குறைந்துள்ளது. அதேபோல் 66.47 அடி உயரம் கொண்ட, வரதமா நதி அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்துள்ளது. மேலும் 80 அடி உயரம் கொண்ட குதிரை ஆறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ளது. மேலும் 3 அணைகளுக்கும் நீர் வரத்து நின்று விட்டது. இதனால் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வரும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால் மழை பெய்தால்தான் பழனியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி