பழனி ஜனவரி 29
பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 31ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் வெள்ளி ரதம் தேரோட்டமும், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணியிற்காக 3500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பிற்காக க்யூ ஆர் கோடு உடன் கூடிய பட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் காணாமல் போனால் சுலபமாக கண்டுபிடிக்கலாம். மேலும் 500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தைப்பூசம் திருவிழாவையொட்டி தென் மண்டல போலீஸ் ஐஜி விஜயேந்திர பிதாரி வருகை புரிந்தார். மலைக்கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சென்று ஆய்வு செய்தார். இதில் பழனி கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி சாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி டிஎஸ்பி தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஆகியோர் உடன் இருந்தனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது