பழனி ஏப்ரல் 2
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் நடைபெற்றது.
பழனியில் புகழ்பெற்ற பங்குனி உத்திரம் திருவிழா, கடந்த மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 7ஆம் நாள் திருவிழாவையொட்டி, கிரிவீதியில் மாலை 4. 30 மணி அளவில், திருத் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் திருத்தேரில் வீற்றிருந்த முருகன் வள்ளி தெய்வானை ஆகியோரை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் நான்கு கிரிவீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, திருத்தேர் உலா வந்தது. முன்னதாக பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, பஞ்சாமிர்தக் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து முருகப்பெருமானை பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்

More Stories
*நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்/ அமைச்சர் மா. மதிவேந்தன் தனது மனுவை, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். திமுக அரசின் சிறப்பு வாய்ந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணி பலம் ஆகியவை தங்களுக்கு வெற்றியை தேடி தரும் என நம்பிக்கை தெரிவித்தார்*.
இராசிபுரம்: 5 ஆண்டு சாதனையை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்…
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்