கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்துங்கள். அதை எப்படி தடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும். இவ்வாறு மம்தா பேசினார்.

More Stories
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?
மேற்கு வங்கத்தில் 144 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி
சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?