March 17, 2026

பாண்டியன் நகரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 

மார்ச் 17

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக வடக்கு மாநகரம் பாண்டியன் நகர் பகுதி கழகம் சார்பில் பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் மத்திய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்தும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு கூட்டணியையும் கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பகுதி செயலாளர் வெ. ஜோதி தலைமையிலும் வடக்கு

மாநகரச் செயலாளர் ஈ.தங்கராஜ்.மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் மாமன்ற உறுப்பினர்கள் கோபால்சாமி. மாலதி கேபிள் ராஜ். வேலம்மாள் வி வி ஜி காந்தி. லோகநாயகி கருப்புசாமி. திமுக வார்டு செயலாளர்கள் செந்தில்குமார்.மூர்த்தி. சுரேஷ்.பாப்புச்சாமி. ஆர் ஆர் செல்வராஜ். வெள்ளைச்சாமி.மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் பகுதி இளைஞரணி செயலாளர் பிடிஆர் பிரகாஷ் மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்

Spread the love