பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது தொடர்பாக…

மதுரை மண்டேலாநகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே.ராஜூ, வி.வி. ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா்.
திருப்பரங்குன்றம்: மதுரையில் பிப். 28-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
மதுரை மண்டேலாநகரில் வருகிற 28-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். இந்தக் கூட்டத்தில் 10 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா். மதுரைக்கு வரும் பிரதமா் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே. ராஜூ, ராஜன்செல்லப்பா, பாஜக நிா்வாகிகள் பேராசிரியா் சீனிவாசன், கதலி நரசிங்கப்பெருமாள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு