சென்னை: தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூருக்கு நேற்று முதல்முறையாக வந்தார். அவரை தொகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
அப்போது, 8-ம் வகுப்பு படிக்கும் ருத்ரா என்ற மாணவி, முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்பியுள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதுபற்றி மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பள்ளிக்கூட புத்தகப் பை அதிக கனமாக உள்ளது. அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது. எனவே, புத்தகப்பை எடையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

More Stories
“பெண்களை தவெகவினரிடம் பாதுகாக்கவே மேலும் ஓர் அதிரடிப்படை தேவை” – தினகரன் விமர்சனம்
கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: அரசு முழு விவரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
“யாரையும் நாங்கள் அழைக்கவில்லை” – குதிரை பேரம் விவகாரத்தில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்