
அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளன்று, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள், அவைக்கு வரும்போதே ஆளும்கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அங்கிருந்த காவலாளிகள் மற்றும் போலீஸார் அவர்களை தடுத்தனர்.
இதுகுறித்து நேற்று பேரவை தலைவர் அய்யண்ணபாத்ருடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர், பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
சில எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வருவதே இல்லை. சரியாக பேரவைக்கு வராத எம்.எல்.ஏக்களை திரும்ப பெறும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

More Stories
பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு
மார்ச்சில் 2 முறை தமிழகம் வரும் மோடி.. எல். முருகன் தலைமையில் மாநில சிறப்புக் குழு.. மோடி போடும் திட்டம் என்ன?
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: வரவேற்பும் அதிருப்தியும் – ஒரு பார்வை