May 8, 2026

மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து – பலன்கள் என்னென்ன?

மதுரை: மதுரை விமானநிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத் துள்ள நிலையில், அதற்கான வரவேற்பும், கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மதுரை விமான நிலைய ஓடுதளம் 1942-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு அச்சிட்ட செய்தித்தாள்களைக் கொண்டு வருவதற்காக செயல்பட்டது.

1952-ல் சிவில் விமான நிலையமாகவும், 1957-ம் ஆண்டு வணிக நடவடிக்கை யையும் தொடங்கியது. 2011-ல் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, சர்வதேச நடவடிக்கையை தொடங்கியது. 2012, செப். முதல் இலங்கைக்கு முதல் விமான சேவை தொடங்கியது.

தென்னிந் தியாவின் முக்கிய சுற்றுலா, வணிக மையமான மதுரை, விமானப் போக்குவரத்தில் இந்தியப் பெருநகரங்களுடன் இணைக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு அக். 1 முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை தொடங்கப்பட்டது.

இவ்விமான நிலைய மொத்த நிலப்பரப்பு 1,045 ஏக்கர். இதில் 17,560 சதுர மீட்டரில் முனைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் 1,230 பயணிகளை இந்தக் கட்டிடத்தில் தங்க வைக்கலாம்.

2024-25-ம் ஆண்டில் இங்கு 13,513 விமா னங்கள் இயக்கக்கப்பட்டு 1.39 மில்லியன் பயணிகள் கையாளப்பட்டுள்ளனர். ஏர்பஸ் 321 வகை விமானங்கள் வந்து இறங்குவதற்கு ஏற்ப 2,285 மீட்டர் ஓடுபாதை நீளத்துடன், மதுரை விமான நிலையம் 12 பார்க்கிங் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணைய (AAI) நிறுவனத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சரவைக் குழுவால் அங்கீகரித்தபடி மதுரை விமான நிலையம் இன்று (மார்ச் 10) முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விக்கிஷித் பாரத் 2047-ன் தொலைநோக்கு பார்வைக்கேற்ப உலகுக்கு, மதுரை விமான நிலையத்தின் கதவுகளைத் திறப்பதன் மூலம் மதுரை சர்வதேச விமான பயணத்துக்கான முக்கிய மையமாக மாற வழிவகுக்கும்.

மதுரையிலிருந்தும், மதுரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் இன்னும் அதிகரிக்கும். மதுரை விமான நிலையம் இந்தியாவுக்குள் மட்டுமின்றி சர்வதேச நகரங்களுக்கும் இணைப்புகளை எளிதாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love