புதுடெல்லி:: பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து மத்திய மின்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பூடானின் புனாட்சங்சு-2 நீர்மின் திட்டத்தின் (1020 மெகாவாட்) மின் உற்பத்தியை வணிக ரீதியாக மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியா – பூடான் இடையே மின்சார பரிமாற்ற உள்கட்டமைப்புக்கான திட்டமிடல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து