கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி பாஜக 144 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 144 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ம் தேதியும் நடைபெற்றன. இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில், ஃபால்டா தொகுதிக்கு வரும் 21ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். திரிணமூல் காங்கிரஸுக்கு பாஜக கடும் சவாலை அளித்து வருகிறது. 148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.10,000 செலுத்த அறிவுறுத்தல்
அமைச்சர் பெரிய கருப்பன் போட்டியிட்ட தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரி மனு.. நீதிமன்றம் அளித்த உத்தரவு
4 பேர் உயிரிழந்த நிலையில் நவி மும்பையில் தர்பூசணி விலை கடும் வீழ்ச்சி