விஜய் வந்தவுடன் ஊழல் குறைந்துள்ளது. அதே போல் புதுச்சேரியில் ஊழல் பெருகி உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி இதை செய்ய ரெடியா என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் பொறுப்பேற்கும் போது நான் ஊழல் செய்ய மாட்டேன். என்னோடு இருப்பவர்களையும் ஊழல் செய்ய விட மாட்டேன். அதிகாரிகளையும் ஊழல் செய்ய விட மாட்டேன். நான் மட்டும்தான் பவர் சென்டர் .எனக்கு கீழ் எந்த வித பவர் சென்டரும் கிடையாது. யாராவது ஊழல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை மறந்து விடுங்கள் என்று மிக கடினமாக மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார். இதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.
நாராயணசாமி- ரங்கசாமிக்கு சவால்
புதுச்சேரியில் இப்பொழுது இரண்டு அமைச்சர்கள் 17ஆம் தேதி பதிவேற்கப் போகிறார்கள். நான் மரியாதைக்குரிய முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு கேட்டுக்கொள்கிறேன் .நீங்கள் அன்றைய தினத்தில் புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் என்னுடைய தலைமையிலான என் .ஆர் .பாஜக ஆட்சியில் இந்த புதிய ஆட்சியில் ஊழல் நடைபெறாது. நான் ஊழல் செய்ய மாட்டேன். ஒரு உறுப்பினர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் .அதிகாரிகள் ஊழல் செய்தால் விட்டுவிட மாட்டேன் .அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பேன் என்று பகிரங்கமாக அறிவிப்பாரா ? அவரிடம் இப்பொழுது 6 புரோக்கர்களை வெளியே அனுப்புவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
India: This Rs.1999 Smartwatch Surprises The Whole CountryAdamFit
இந்தியா கூட்டணியில் திமுக இல்லை! தவெக நிலை என்ன?
மேலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கிறேன். மகாத்மா காந்தி சிலை முன்பாக முதலமைச்சர் ,அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கே கூடி எங்களுடைய ஆட்சியில் ஊழல் நடைபெறாது. நாங்கள் யாரும் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். யாரையும் ஊழல் செய்ய விட மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள தயாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் ஊழல் பெறுகிறது.
விஜய் வந்தவுடன் ஊழல் குறைந்துள்ளது
தமிழக முதல்வர் விஜய் அவர்களை பாராட்ட வேண்டும் பொதுப்பணித்துறையில் ஊழல் குறைந்திருக்கிறது .பத்திர பதிவுத்துறையில் ஊழல் குறைந்திருக்கிறது. பட்டா வழங்குவதில் ஊழல் இல்லை வெளிப்படை தன்மை இருக்கிறது .பிள்ளைகளுக்கு சான்றிதழ் கொடுப்பதிலே ஊழல் நடைபெறவில்லை. அதாவது திரு விஜய் அவருடைய நெருக்கமானவர் என்று சொல்லுகின்ற முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் இதை செய்வதற்கு தயாராக இருக்கிறார் ரங்கசாமி ரெடியா ?நாங்கள் அவருக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். அவருக்கு இரண்டு மாத காலம் கொடுக்கிறார்.
முதலமைச்சர் ரங்கசாமியின் கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறையில் முப்பது சதவீத ஊழல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30% ஊழல், பார் வழங்குவதில்50% ஊழல், பட்டா வழங்குவதில் ஊழல் வேலைவாய்ப்பு வழங்குவதில் ஊழல் அதுமட்டுமின்றி ரேஷன் கடையின் சிவப்பட்டையை மஞ்சள் அட்டையாக மாற்றுவதற்கு ஊழல் என இப்படி பட்டியலிட்டு நாங்கள் கூறினோம்.
புதுச்சேரி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியும் தெளிவாக சொல்லுகிறார் .நான் ஊழல் செய்ய மாட்டேன் .என்னுடைய ஆட்சியை ஊழல் செய்பவர்களை விட்டு விட மாட்டேன் என்று கூறுகிறார். ஆனால் புதுச்சேரியில் அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் வேலை செய்வதில்லை. இதை முதலமைச்சர் அவர்கள் தனக்கு மக்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி நிர்வாகத்தை சீர் செய்ய வேண்டும்.முழுமையாக ஊழலை ஒழிக்க வேண்டும். முதல் கட்டமாக அவரோடு இருக்கின்ற ஆறு புரோக்கர்களை அனுப்ப வேண்டும்.அவரால் செய்ய முடியுமா ? செய்வதற்கு அவருக்கு தெம்பு திராணி இருக்கிறதா என நாராயண சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

More Stories
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
கரு. பழனியப்பனின் `குக்கர்’.. படத்தின் தலைப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!
ஜூன் 18ல் சட்டமன்ற கூட்டத்தொடர்.. எம்எல்ஏ-கள் பயிற்சி முகாம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!